வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி…!!
கிளிநொச்சி மற்றும் கிளிநொச்சியை சூழ உள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஒரு அமைதி இன்மை ஏற்பட்டிருந்தது.
பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட அமைதியின்மையினை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததனை காணக் கூடியதாக இருந்தது.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்து வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு ஏ 9 வீதியில் டயர்கள் எரிக்கப்பட்டு பிரதேச மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டி இருந்தனர்.
இதனை அடுத்து கிளிநொச்சி பகுதிக்கு கலகம் அடக்கும் பொலிசார், விசேட அதிரடிப்படை, போக்குவரத்துப் பொலிசார் நேற்றையதினம் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்படி கிளிநொச்சி நகர் தற்பொழுது வழமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பாடு மீண்டும் அமைதியான நிலைமை தோன்றியுள்ளது.
மக்கள் வழமை போன்று தமது செயற்பாடுகளில் ஈடுபட்டு வருதனை காணக்கூடியதாக உள்ளது என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Average Rating