இப்படியும் ஊர் மக்களா? மரணத்திலும் காதலனை கைவிடாத காதலி…!!
ஒரு ஊரில் அழகான கிராமம் ஒன்று இருந்தது, அந்த கிராமத்தின் தலைவருக்கு தேவதை போன்று ஒரு அழகான பெண் இருந்தாள்.
அந்த பெண் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பையனை காதலித்து வந்தாள். அந்த பையனும் அவளை காதலித்தான்.
ஆனால் இருவருள் யார் தங்களின் காதலை முதலில் சொல்வது என்று புரியாத புதிராகவே இருந்து வந்தது.
ஒருநாள் அந்த பெண்ணே அவனிடம் போய் தன்னுடைய காதலை சொல்லி விட்டு வெட்கத்தில் தலைகுனிந்தால், அவனும் அவளின் காதலை ஏற்றுக் கொண்டான்.
பின் இருவரும் காதல் மயக்கத்தில் மிதந்தார்கள்.
பின் இவர்களின் காதல் பற்றி அந்த ஊரில் உள்ளவர்களுக்கும், அவளின் அப்பாவுக்கும் ஒரு நாள் தெரிந்து விட்டது.
ஊரில் உள்ள அனைவரும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்த விஷயம் தெரிந்த, அந்த ஆணும் பெண்ணும் ஊரை விட்டு சென்று வேறு ஒரு ஊரில் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.
அப்போதும் அந்த ஊர் காரர்கள் அமைதியாக இல்லை. அவர்களை தேடி செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்தார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் அந்த காதலர்கள் வெளியில் செல்லும் போது அந்த ஊர்காரர்கள் பார்த்து அதே இடத்தில் அந்த பையனை கொன்று விட்டு அவளை அழைத்துச் செல்ல முற்பட்டார்கள்.
கண் முன்னே தன் காதல் கணவனை இழந்த அந்த பெண் அதே இடத்தில் தன்னுடைய உயிரையும் மாய்த்து கொண்டாள். இவர்களின் காதல் வாழ்க்கை முடிவில் கனவாகவே முடிந்து விட்டது.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Average Rating