இரத்தம் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது..!!
நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு ரத்தோட்டம் முக்கிய காரணமாக உள்ளது.
கார்ல்லான்ட் ஸ்டீனர் என்பவர் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தை A, B, AB மற்றும் O என்று நான்கு வகைப்படுத்தியுள்ளார்.
ஒரு சராசரி எடை கொண்ட மனிதன் உடலில் சுமார் 5 லிட்டர் அளவு ரத்தம் உள்ளது என்று வில்லியம் ஹார்வி என்பவர் ரத்த ஓட்டத்தை பற்றி கண்டுபிடித்துள்ளார்.
மனித உடம்பில் ஓடும் ரத்தத்தின் திரவப் பகுதியானது, பிளாஸ்மா மற்றும் ரத்த செல்களால் ஆனது.
சிவப்பணு, வெள்ளையணு மற்றும் ரத்த தட்டுகள் ஆகியவை ரத்தத்தின் பகுதிப் பொருட்களாக உள்ளது.
நமது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹீமோகுளோபின்களானது, ரத்தத்தில் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் சிவப்பணுக்களில் அதிகமாக காணப்படுறது.
எலும்பு மஜ்ஜை மற்றும் தைமஸில் உற்பத்தியாகும் ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆதாரமாய் உள்ளது.
ரத்த சிவப்பணுக்கள் சராசரியாக 120 நாட்கள் உயிருடன் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது ரத்தசோகை ஏற்படுகிறது.
நமது உடம்பில் ஓடுகின்ற ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பணுக்கள் காணப்படுகிறது.
உடலில் காயங்கள் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுப்பதற்கு பிளேட்லட் என்னும் சக்திக் கொண்ட அணுக்கரு நமது உடம்பில் உள்ளது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating