நாட்டறம்பள்ளி அரசு பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி…!!
Read Time:1 Minute, 15 Second
நாட்டறம்பள்ளியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜங்களாபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படிக்கிறார்.
இவர் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை வகுப்பு ஆசிரியர்கள் கண்டித்தனர். இதனால் மாணவி மனவேதனை அடைந்தார்.
இன்று காலை பள்ளிக்கு சென்ற அவர் வகுப்பறையில் விஷம் குடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக மாணவிகள் பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம் பள்ளி அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நாட்டறம் பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating