மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றன…!!
Read Time:51 Second
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள், நாளை (28) மூடப்படவுள்ளன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
மேலும், இதற்கு பதிலாக அடுத்து வாரத்தில் வரும் சனிக்கிழமையன்று தமிழ் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளை மறுநாள் 29ஆம் திகதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நாளை மாணவர்களின் வருகை குறைவாக இருக்கும் என்பதன் காரணமாகவே தமிழ் பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating