தீபாவளி தினத்தன்று மதுவிற்பனைக்கு தடை…!!
Read Time:57 Second
தீபாவளி தினத்தை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 28ஆம் திகதியன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
இதேவேளை மத்திய மாகாணம் மற்றும் பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் தீபாவளி தினமான 29ஆம் திகதியன்று மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வீ .இராதாகிருஸ்ணன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Average Rating