ஆக்ராவில் கற்பழிப்பு முயற்சியில் இளம்பெண் கை துண்டிப்பு – 2 வாலிபர்கள் வெறிச்செயல்..!!

Read Time:1 Minute, 50 Second

201610271105370691_teens-arm-hacked-off-in-molested-attempt_secvpfஉத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இஸ்தாவுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 16 வயது மகளுடன் இரவில் வெளியே சென்றார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

திடீர் என்று இருவரும் இளம்பெண்ணை துணியால் முகத்தை மூடி அருகில் உள்ள இடத்துக்கு கடத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து விடுபட அந்த பெண் கடுமையாக போராடினார். உடனே அவர்கள் கீழே தள்ளி கற்பழிக்க முயன்றனர். தொடர்ந்து போராடியதால் அவர்கள் அந்த பெண்ணின் வலது கையை அரிவாளால் வெட்டி துண்டித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலில் இளம்பெண் ரெயிலில் அடிபட்டு கை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தாள். அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணையில் இறங்கிய பின்புதான் அரசியல்வாதிகள் மிரட்டல் காரணமாக மாற்றிச் சொன்னது தெரிய வந்தது.

மிரட்டல் விடுத்த உள்ளூர் அரசியல் பிரமுகர் யார் என்றும் கையை வெட்டியவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்: தேவாலயம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சேதம்…!!
Next post நயன்தாராவை புண்படுத்தவில்லை: விவேக் விளக்கம்…!!