புரியாத புதிரான விஜய் சேதுபதியின் மெல்லிசை…!!
அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும்.
அப்படி ஒரு புதுமையான புதிர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது தான் விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மெல்லிசை’ திரைப்படம். வலுவான கதையம்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படத்திற்கு மெல்லிசை போன்ற ‘மெல்லிசை’ தலைப்பு பொருந்தாத காரணத்தினால், தற்போது இந்த படத்திற்கு ‘புரியாத புதிர்’ என்ற புதிய தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர்.
ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, ‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை ‘ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் வாங்கி இருக்கிறார் ஜே.சதீஷ்குமார். இதே தலைப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ‘புரியாத புதிர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற நவம்பர் மாதத்தில் ‘புரியாத புதிர்’ படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த வருடத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் ஏழாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating