இத்தாலியிலிருந்து மோசடியாக கொண்டுவரப்பட்ட ஆடம்பர மோட்டர் சைக்கிள்! பெறுமதி எவ்வளவு?
இத்தாலியிலிருந்து மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
போலி இலக்கத் தகடு பயன்படுத்தி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நீர்கொழும்பு பொலிஸ் சோதனை பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
எஞ்சிய பொருட்கள் என கூறிக் சுங்க பிரிவிற்கு வரி செலுத்தாமல் இலங்கைக்கு இந்த மோட்டார் சைக்கிள் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஒரே இலக்கங்களில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நீர்கொழும்பு சட்டம் அமுலாக்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் ரக இலக்கத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
23 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மோட்டர் சைக்கிளை வெறும் எட்டரை இலட்சம் ரூபா செலுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பிலியந்தலையை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து நீர்கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் இந்த மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
எஞ்சிய பொருட்களை கொண்டு வருதவாக ஏமாற்றி, இத்தாலியில் இருந்து கொள்கலன் ஒன்றினுள் இந்த மோட்டார் சைக்கிள் மறைந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வரி செலுத்தாமல் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு வர்த்தகரின் மகனுக்கு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த பிலியந்தலை நபரை தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Average Rating