மட்டக்குளி துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது….!!

Read Time:1 Minute, 36 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நபர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 11 பேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த 11 பேரையும் இந்த மாதம் 31 ஆம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்குளி சமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயத்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இத்தாலியிலிருந்து மோசடியாக கொண்டுவரப்பட்ட ஆடம்பர மோட்டர் சைக்கிள்! பெறுமதி எவ்வளவு?
Next post சிறுவனை கட்டிவைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர்! தந்தை கைது…!!