கந்தளாயில் தொடரும் யானைகளின் அட்டகாசம்…!!

Read Time:1 Minute, 39 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் காணிக்குள் நேற்று(27) நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் பத்து தென்னை மரங்களையும், இரண்டு மா மரங்களையும் முறித்து நாசமாக்கியுள்ளதாக காணி உரிமையாளர் தெரிவிக்கிறார்.

கந்தளாய் பிரதேசத்தில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் இரவு வேளைகளில் வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிகளில் வாழும் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருவதோடு, யானைக்கான மின்சார வேலியினை அமைத்து தருமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் மனித உயிர்களை இழக்கும் நிலையேற்படும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கந்தளாய் அக்போபுர பகுதியில் நான்கு வீடுகளை சேதப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆமா இவ்வளவு கூட்டமாக இந்த மனிதர்கள் என்ன செய்றாங்க?… பாருங்க உங்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கு…!! வீடியோ
Next post இளம் பெண் ஒருவர் செய்த காரியம்!! இணையத்தளத்தில் பரவும் காணொளி..!! (வீடியோ)