இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம்
Read Time:1 Minute, 13 Second
கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி பேரலைகள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. பேரழிவை ஏற்படுத்திய இந்த சுனாமிக்குப் பிறகு அவ்வப்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை இந்தோனேஷியாவில் பாண்டா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் துறை அறிவித்துள்ளது. மொலுக்காஸ் மற்றும் கம்பான் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
கட்டிடங்கள் அதிர்ந்தன. சுனாமி பேரலைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் பொதுமக்கள் சுனாமி பீதியில் வீடுகளை விட்டு மேடான பகுதிகளுக்கு ஓடினார்கள். இன்னும் அவர்கள் திறந்த வெளியிலேயே அச்சத்துடன் தங்கியுள்ளனர்.