சிரியாவில் பள்ளிமீது குண்டுவீசி தாக்குதல் – 6 குழந்தைகள் பலி…!!
Read Time:1 Minute, 28 Second
ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் முன்முயற்சியால் சமீபத்தில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதே அங்குள்ள போராளிகள் முகாம்மீது சிரியா மற்றும் ரஷியா நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் பலர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
இதேபோல், உள்நாட்டு ராணுவமும் புரட்சிப் படையை சேர்ந்த போராளிகள்மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அலெப்போ அருகிலுள்ள இட்லிப் மற்றும் ஹம்தானியா நகரில் புரட்சிப் படையினர் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்துவரும் பிரிட்டன் நாட்டு பார்வையாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
Average Rating