வெடி வைக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?
குழந்தைகளுக்கு தீபாவளி என்றதுமே பட்டாசுகள் தான் ஞாபகத்திற்கு வரும், விளையாட்டுத்தனமாக குழந்தைகள் இருந்தாலும் பெற்றோர்கள் அருகில் இருப்பது அவசியம்.
இதேபோன்று பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்வது அவசியம்.
பட்டாசு வெடிக்கும் போது
பெற்றோர்கள் நல்ல பிராண்ட் உள்ள பட்டாசுகளை வாங்க வேண்டும்.
பின் குழந்தைகள் காட்டன் ஆடைகளையே குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டும், கண்டிப்பாக காலில் செருப்பு இருக்க வேண்டும்.
ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் மற்றும் மண்ணை தீப்பிடித்தால் உபயோகிக்க என்று வைத்திருக்க வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்டால்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டம். பின் தீக்காயத்திற்கான கிரீமை மேலே தடவி விடவேண்டும்.
கொப்புளம் ஏற்பட்டால் அதை உடைக்காமல் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காயம் ஆற ஆற அந்த கொப்புளத்தின் உள் இருக்கும் நீர் வற்றி, மேல் தோல் உதிர்ந்து விடும்.
வயிற்று உபாதைகள் ஏற்பட்டால்
சுக்கு, இஞ்சி காபி, சீரகம் மற்றும் சோம்பு கஷாயம், தீபாவளி லேகியம் போன்றவைகளை முன்கூட்டியே குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது, நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை கொடுப்பதும் அவசியம்.
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் 1 ஸ்பூன் சர்க்கரையும் 1 சிட்டிகை உப்பும் கலந்த கரைசலை உடனடியாக கொடுக்க வேண்டும்.
முன்கூட்டியே உங்கள் குழந்தையை பரிசோதிக்கும் மருத்துவரிடம் உணவு நச்சு, வயிற்றுபோக்கு மற்றும் வாந்திக்கான முதலுதவி மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்வதும் நல்லது.
strong>இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating