பதுளையில் நீரில் மூழ்கி இளைஞர் பலி…!!
Read Time:58 Second
பதுளை – ஸ்பிரிங்வெலி பகுதியில் பிளக்ப்போல் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நிட்டம்புவ பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்றும் பொருட்டு தேடுதல் நடவடிக்கையை நேற்று மாலை பிரதேசவாசிகள் மேற்கொண்டுள்ளனர்.
இருந்தும் இம்முயற்சி பயனளிக்காமையினால், குறித்த இளைஞர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating