வித்தியாசமாக பண மோசடி செய்த நபர் சிக்கினார்…!!
பல பிரதேசங்களில் நபர்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த ஒருவரை கைது செய்வதற்காக அம்பாறை பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பதியத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் அம்பாறை விசேட குற்றத்தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கப்படும் என்று பத்திரிகையில் வெளியான விளம்பரத்திற்கு அமைய இந்த பெண் சந்தேகநபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
கடனை வழங்குவதற்காகவென கூறி சந்தேகநபர் குறித்த பெண்ணிடம் 5 இலட்சம் ரூபாவை முதலில் பெற்றுக்கொண்டுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்டு வழங்குவதாக கூறிய கடன் தொகையை வழங்காது ஏமாற்றியதை அடுத்து பெண் பொலிஸாரிடம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் இவ்வாறு பலரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நபர்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகள் மற்றும் இலத்திரனியல் அட்டைகள் மூலம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating