ஆண்கள் பெண்களிடம் கொஞ்சமும் வாய் கூசாமல் சொல்லும் பொய்கள்…!!

Read Time:11 Minute, 45 Second

16-1424078138-3youarealwsyslooksslim-585x439கண்களில் மைப் பூசாதப் பெண்களும், காதலில் பொய் பேசாத ஆண்களும் இருந்ததாய் சரித்திரம், இயற்பியல், வேதியல், உயிரியல் என எதிலுமே இருந்ததில்லை. பொய் பேசுவது என்பது ஆண்களுக்கு அல்வா சாப்பிடுவது போல என அனைவரும் அறிந்ததே. அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு.

ஆனால், காதலில் ஆண்கள் பொய் கூறிட ஒரே காரணம், பெண்களும், அவர்களது கறார் குணமும் மட்டுமே ஆகும். அவர்கள் ஆண்களுக்கு விதிக்கும் சில கட்டுப்பாடுகள் தான் அவர்களை பொய் பேச வைக்கிறது. சில காதல் ஆரம்பமாவதே பொய்களில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் சுவையான பொய்கள் உறவினை இனிமையாக்குகிறது.

ஆனால், அதுவே பொய் என தெரிந்ததும் சண்டை பூகம்பமாய் வெடிக்கும். பொய்யை விட ஏமாற்றப் பட்டுவிட்டோம் என்பதில் தான் பெண்கள் மனமுடைந்து கோபத்தின் உச்சிக்கு செல்கின்றனர். ஆயினும், பெண்கள் கண்டுபிடிக்காத அளவு பொய் பேசுவதில் ஆண்கள் வல்லவர்கள். அது என்னென்ன பொய்கள், அதை ஏன் பெண்கள் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்…
முக்கிய நாட்கள்

காதலில் சில முக்கியமான நாட்களை பெண்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். உதாரணமாக, முதன் முதலில் பார்த்தது, கட்டிப்பிடித்தது, முத்தமிட்டது, பைக்கில் சென்றது என இந்த லிஸ்ட் பெரிதாய் நீண்டுக்கொண்டே போகும். ஆனால், இயற்கையிலேயே ஞாபக மறதி கொண்ட ஆண்களால் இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் அவர்கள் கூறும் முதல் பொய் இங்கிருந்து ஆரம்பிகிறது. “ஆ!! தெரியுமே, அந்த நாள எப்படி மறக்க முடியும் செல்லம்!!

மிஸ் யூ டியர்!

ஆண்களுக்கு, காதலியுடன் சுற்றுவதற்கு இணையாய் நண்பர்களுடன் ஊர் சுற்றவும் பிடிக்கும். ஏன் பெண்களும் அப்படி தான். ஆனால், காதலன் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்ற கிளம்பும் நேரங்களில், பெண்களுக்கு எங்கிருந்தோ பொங்கி வரும் காதல் அவர்களை தடுக்க முயற்சிக்கும். ஆயினும் அதை சமாளிக்க ஆண்கள் அலைபேசி உரையாடல்களிலும் குறுஞ்செய்திகளிலும் “மிஸ் யூ டியர், டார்லிங்!!” என தட்டிவிட்டு தப்பித்து விடுவார்கள்.

நீ எப்பவுமே ஸ்லிம்மா’தான் இருக்க

காதலி எவ்வளவு எடை கூடினாலும் ஆண்கள் சொல்லும் ஒரே பதில், “இல்லையே அப்படியா தெரியுது உனக்கு. நீ எப்பவுமே ஸ்லிம்மா தான் இருக்க.” ஒருவேளை ஆண்கள் எடை கூடியதை ஆமாம் என்று சொல்லிவிட்டால், அன்றைய தினம் அங்கேயே முடிந்துவிடும். அதற்காக தான் குழந்தை மனம் படைத்த ஆண்கள் பல இடங்களில் உண்மையை சொல்வதில்லை.

காதல் நினைவுகள்

காதலில் எத்தனையோ இனிமையான நிகழ்வுகள் நிகழ்ந்தேரியிருக்கும். அத்தனையும் ஆண்கள் நினைவில் நிலைப்பதில்லை. ஏனோ மாறாக பெண்களின் நினைவில் அப்பட்டமாய் ஒட்டிகொள்கிறது. அதனால் தான் ஆண்கள் அடிக்கடி “தெரியும் மா, அத மறக்க முடியுமா, அன்னிக்கி நீ எவ்வளோ அழகா இருந்த சான்சே இல்ல” என பல பொய்கள் சொல்ல காரணமாகிவிடுகிறது.
புகை, மது

ஏனோ, ஆயிரம் முறை சத்தியம் செய்தாலும் ஆண்களால் காப்பாற்ற முடியாத ஒரே விஷயம் புகை மற்றும் மது! இதற்கு காரணம் காதலிகள் அல்ல நண்பர்கள் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். ஏன்டா, அவ சொன்னா குடிக்க மாட்டியா, நட்புக்கு நீ குடுக்குற மரியாத அவ்வளவு தான்’ல என்று நண்பர்கள் மூச்சு விடாமல் வசனம் பேசும் போது, நட்பில் உருகி செய்த சத்தியத்தை மறந்திடுவார்கள் ஆண்கள். ஆனால், காதலி கேட்கும் போது, “புகையா? மதுவா? அதை உனக்கு சத்தியம் பண்ண நாளில் இருந்து தொடரதே இல்ல” என்று இன்னொரு பொய் சொல்வது ஆண்களின் பழக்கம்.
காதலி சமைத்த உணவு

சில நாட்கள் காதலனுக்காக பெண்கள் ஆசை ஆசையாய் சமைத்து தருவார்கள். ஆண்களும் அது ருசியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், ரசித்து சாப்பிடுவார்கள். ஏனெனில் வேறு வழியில்லை என்பது தான் உண்மை. இது நடந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஓடிய பின் பெண்களிடம் இருந்து ஒரு கேள்வி வரும், “அன்னிக்கி நான் சமைச்சு கொடுத்தது உனக்கு நிஜமாவே பிடிச்சது தான?” ஆண்கள், அவர்களது மனம் நோகாமல் இருக்க வேண்டும் என “ஆம்” என்று சொன்னாலும். அடுத்த கேள்வி தான் வினையை கிளப்பும், “எங்க நான் என்ன சமைச்சு கொடுத்தேன்னு சொல்லு பாப்போம்? இங்கு உண்மை பேச எங்கு வழியிருக்கிறது.

உணவகங்கள்

பெண்கள் பெருமளவு உயர்தர உணவங்களுக்கு தான் செல்வர். ஆனால், மாதம் முழுக்க ஆண்களின் பர்ஸ் நிறைந்தே இருக்காது என்பது தான் உண்மை. அந்த நேரத்தில் இந்த பொய் சொல்லி தான் ஆக வேண்டும், “இங்க நல்ல தான் இருக்கும், ஆனா இத விட ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு மா, இந்த தடவ நாம அங்க போலாம்”

முகப்புத்தகம்

ஒரு வேலை முகப்புத்தகத்தில் நாம் ஏதாவது புதியதாய் ஒரு பெண்ணுடன் நட்பு வைத்துள்ளோம் என தெரிந்து விட்டால். பெண்கள் கும்மி எடுத்துவிடுவார்கள். அதனால் ஆண்கள் சொல்லும் பொய், “அட நான் ஒன்னும் பண்ணல, அந்த பொண்ணு எனக்கு ரெக்வெஸ்ட் அனுப்புனா” என்று வாய்கூசாமல் புளுக ஆண்களால் மட்டுமே முடியும்.

கோவமா? இல்லையே

நாம் காதலிகளுக்கு பிடிக்காததை செய்துவிட்டால், அய்யோ அம்பேல்! அதுவே, நமக்கு பிடிக்காததை அவர்கள் செய்துவிட்டு வந்தால். நாம் எதுவும் சொல்ல கூடாது என்பது, பெண்ணுரிமை! “கோவமா? இருக்கியா என்மேல” என்று அவர்கள் கேட்கும் போது, “கோவமா? ச்சே ச்சே.. அப்படி எல்லாம் இல்ல!” என்று ஆண்கள் சொல்லும் பொய்யை இன்று வரை எந்த பெண்ணும் கண்டுப்பிடத்ததே இல்லை என்கிறது உலக காதல் வரலாறு!

சண்டே ஷாப்பிங்

அலுவலக வேலைகளில் வாரத்தில் ஆறு நாள் ஒய்ந்து போய் ஆண்கள் ஓய்வெடுக்கும் ஒரே நாள் சண்டே தான். ஆனால், அன்று தான் ஷாப்பிங் செய்ய அழைப்பார்கள் அன்பு காதலிகள். அன்று முழுவதும் ஆண்களுக்கு உண்மை விரதம். அதிலிருந்து தப்பிக்க பொய்கள் மட்டுமே வரும் ஆண்களின் வாய்களில் இருந்து.

உடற்பயிற்சி

சூர்யா, ஆர்யா என்று அவர்கள் உடற்கட்டை படத்தில் பார்த்து வந்துவிட்டு, அவர்களது காதலர்களையும் அவ்வாறு உடல் ஏற்ற சொல்வது காதலிகளின் செல்லமான கட்டளை. அதிகாலை எழுந்திருப்பதே கடினம். அதிலும் உடற்பயிற்சி என்றால்? முடியவே முடியாது. இதிலிருந்து தப்பிக்க, ஆண்கள் அப்போது தான் அறிவியல் பூர்வமாக பேசுவார்கள், சரியான ஆலோசனை இன்றி அப்படி எல்லாம் திடீர் என உடல் ஏற்றினால். “அந்த” சமாச்சாரங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என. இது போதுமே அதன் பின் பெண்கள் வேறு கேள்வியே கேட்கமாட்டார்கள்.
அந்த மாதிரி படங்கள்

இயல்பாகவே ஆண்களுக்கு இதில் நாட்டம் அதிகம் தான். எனிலும், அந்தரங்கமும் அந்த மாதிரி படங்களும் எனக்கு பிடிக்காது என ஏதாவது ஓர் ஆண் சொன்னால். அடுத்த கேள்வி அவரை பார்த்து நீ ஆண் தானா? என சமூகம் கேட்காவிட்டாலும். நண்பர் கூட்டம் கேட்கும். பெண்கள் வட்டாரதினுள், தனது காதலனுக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை என காட்டிக் கொள்வது பெருமைக்கு உரிய விஷயம். அதற்கு ஆண்கள் என்ன செய்ய இயலும். பொய் தான் சொல்ல முடியும். இதையெல்லாம் பெண்கள் எங்கு கண்டுபிடிக்க போறாங்க!

நாயகிகள்

பெண்களுக்கு பிடித்தமான நாயகர்கள் இருக்கலாம். ஆனால், ஆண்களுக்கு அவர்களது காதலிகள் மட்டுமே நாயகியாக தெரிய வேண்டும் என்பது கட்டாயம். அதனால், பெண்கள் எத்தனை லட்சம் முறை கேட்டாலும். ஆண்கள் கூறும் உலக மகா பொய், “நீதாண்டி செல்லம் எனக்கு எப்பவுமே அழகு!”

சம்பளம்

இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு எனினும், பெண்கள் ஆண்களுக்கு நிகராய் சம்பாதிக்கின்றனர், ஏன் பலர் அவர்களுக்கு மேலாகவே ஊதியம் பெறுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் ஆண்களால் அது பொறுத்துக் கொள்ள இயலாது. இதை அப்பட்டமாக கூறினால் விபரீத முடிவுகளை காண நேரிடும் என்பதால். ஆண்கள் எப்போது, “ச்சே ச்சே, நீ சம்பாதிக்கிறது எனக்கு பெருமையா தான் இருக்கு” என்று கூறுவார்கள்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா சம்பந்தன்? கட்டுரை
Next post கருணா- பிரபா மோதல்!!: சுடுகாடாக மாறிய கிழக்கு… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!