திருகோணமலை இளைஞன் தற்கொலை…!!
Read Time:1 Minute, 16 Second
திருகோணேஸ்வரம் மலைக் கோயிலிருந்து இளைஞர் ஒருவர், சமுத்திரத்திற்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜப்வர் என்ற 32 வயது இளைஞனே, இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டுள்ளார்.
குறித்த இளைஞன், நேற்று(28) காலை 9.57 மணியளவில் கோயின் முன்பாகவுள்ள புறமுனை மலைக் கோயில் மலையிலிருந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது, அங்கு பொருத்தப்பட்டிருந்து சீசீடிவி கமெராவிலும் பதிவாகியுள்ளன.
மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டும் இவ் இளைஞன் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் மற்றும் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating