பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி- 16 பேர் காயம்…!!
Read Time:1 Minute, 15 Second
ஈராக் தலைநகரான பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கர்பாலா புனித நகரமாக கருதப்படுகிறது. இந்த நகரத்திற்கு பாக்தாத்தில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் வருவது வழக்கம். இவர்களுக்கு ஆங்காங்கே கூடாரம் அமைத்து உணவுப் பொருட்கள் வழங்குவார்கள்.
அதன்படி மேற்கு பாக்தாத்தில் உள்ள இஸ்கான் பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி கொண்டிருந்தனர். அந்த இடத்தை குறிவைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தினார்கள். இதில் நான்கு பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ். அமைப்பு, ‘‘காவல் நிலைய செக்போஸ்டை தாண்டி வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்’’ என்று பெருமையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
Average Rating