எட்டு லட்சம் ரூபா பணத்துடன் சாரதி தலைமறைவு! பொலிஸார் வலைவீச்சு…!!

Read Time:2 Minute, 17 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90வத்தளை, மாபோலயில் பிரபல தனியார் நிறுவனமொன்றில் எட்டு லட்சம் ரூபா பணத்துடன் நிறுவன வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக வத்தளை பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

வத்தளை மாபோல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சாரதியாகப் பணிபுரிந்த நபர் ஒருவர் கடந்த விஜயாழக்கிழமை காலை நிறுவனத்தின் ஆறு லட்சம் ரூபா , இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரு காசோலைகள் உள்ளிட்ட நிறுவனத்தின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

இந்நிலையில் வத்தளை, மாபோல பிரதான வீதிக்கருகில் குறித்த வாகனத்தை நிறுத்தி விட்டுவிட்டு அவர் தலைமறைவாகியுள்ளார்.

அச்சமயம் குறித்த வாகனத்தில் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான சரக்குகள் இருந்ததாகவும் தெரியவருகிறது.

குறித்த சாரதி தொடர்பான தகவல்கள் ஏதும் நிறுவனத்துக்கு தெரியவராத நிலையில் அவருக்கு எதிரான முறைப்பாடொன்றை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளார்.

சாரதியாகப் பணிபுரிந்த குறித்த சந்தேக நபர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இரத்தினபுரி, பெல்மடுல்ல வீட்டின் அறையை பொலிஸார் சோதனையிட்ட போது அங்கு எதுவும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் தலைமறைவாகியிருக்கும் இடம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ள நிலையில் விரைவில் அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது…!!
Next post கொஞ்சி விளையாடுவதால் இவ்வளவு நன்மைகளா?