10 ஆம் தர பாடாலை மாணவி கர்ப்பம், 15 வயது பாடசாலை மாணவனின் செயல்..!!
10 ஆம் தர பாடாலை மாணவி ஒருவரை 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாத்தன்டிய பிரதேசத்தினை சேர்ந்த சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.பாலியல் துஷப்பிரயோகத்துக்கு உள்ளான மாணவியின் வீட்டிற்கு அருகாமையிலே சந்தே நபரான மாணவரின் வீடு அமைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மாணவிக்கும், சந்தேக நபரான மாணவருக்கும் இடையில் காதல் உறவு இருந்துள்ளதாக அறியவந்துள்ளது.சந்தேக நபரின் வீட்டில் மின்சாரம் இல்லாமை காரணமாக, மாணவியின் வீட்டிற்கு வந்து தொலைக்காட்சி பார்த்து வந்துள்ளார்.
இவ்வாறு தொலைக்காட்சி பார்ப்பதாக வந்து குறித்த பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.பாடசாலை நேரத்தின் போது மாணவி மயக்கமுற்றுள்ள நிலையில் இது குறித்து பாடசாலை அதிபர் மாணவியின் பெற்றோரிடம் தகவல் வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவ அறிக்கையில் மாணவி கர்ப்பிணியாக உள்ளமை ;அறியவந்துள்ள;நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மாரவில காவற்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டதனை தொடர்ந்து சந்தேக நபரான மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating