வவுனியாவில் மடக்கி பிடிக்கப்பட்ட முதலை….!!
Read Time:59 Second
வவுனியா உக்குளாங்குளத்தில் இன்று(31) அதிகாலை முதலை ஒன்று மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக நெளுக்குளம் குளத்திலிருந்த முதலையொன்றே பிரதேசத்திற்குள் நுழைந்துள்ளது.
இந்த முதலையினை சில மணி நேர போராட்டத்தின் பின்னர் பொதுமக்கள் மடக்கி பிடித்து மின் கம்பம் ஒன்றிலே கட்டிவைத்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதுடன் அதிகளவான பொது மக்களும் முதலையினை பார்வையிடுகின்றனர்.
கடந்த 25ஆம் திகதி அன்றும் உக்குளாங்குளத்தில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating