இஸ்ரேல் எல்லை அருகே 15 ஆயிரம் வீரர்களை நிறுத்த லெபனான் ராணுவம் முடிவு
Read Time:1 Minute, 18 Second
லெபனானில் இஸ்ரேல் எல்லை அருகே 15 ஆயிரம் படை வீரர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இப் பகுதியில் படை வீரர்களை நிறுத்த தேதி ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், சில நாளில் இப் பணி மேற்கொள்ளப்படும்.
ராணுவ வீரர்களை நிலை நிறுத்துவது என்பது லெபனான் எல்லைப் பகுதியை ஒட்டிய பகுதியில் இருக்கும். குறிப்பாக, லிடானி ஆற்றுப் பகுதியில் இந்த வீரர்கள் நிலைநிறுத்தப்படுவர்.
ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதியில், முன்னதாக இஸ்ரேல் படைகள் குவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப் படைகள் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதால் அங்கு இப் படை வீரர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெளிவுப்படுத்தினார் ராணுவ அதிகாரி