வவுனியாவில் தொடர்ந்து பிடிபடும் கஞ்சா..!!

Read Time:1 Minute, 29 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3வவுனியா – தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனைச்சாவடியில் நேற்று(31) இரவு வேளை பெருமளவில் கேரள கஞ்சா பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே சுமார் 50 கிலோ கிராம் கேரள கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்து செல்லப்பட இருந்த கேரள கஞ்சாவினையும் சந்தேகத்திற்கிடமான இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், இதே இடத்தில் கடந்த 29-10-2016 காலை சொகுசு கார் ஒன்றிற்குள் இருந்து 14 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சோதனைச்சாவடியில் ஒரு மாத காலத்திற்குள் பெருமளவான கஞ்சா இதோடு மூன்றாவது தடைவையாக பிடிப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திமிங்கிலங்களை பார்வையிடச் சென்ற நபர் திடீரென உயிரிழப்பு…!!
Next post புறாவிற்கு தீனி வைக்க முயன்ற சிறுவன் பரிதாபகரமாக பலி…!!