யாழில் 74 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது…!!
யாழ்.காரைநகர் பிரதேசத்தில் 74 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கேரள கஞ்சாவுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரவு வேளையில் படகுமூலம் மன்னாருக்கு ஒருதொகை கேரளா கஞ்சாவினை மாற்றம் செய்வதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மன்னாரைச் சேர்ந்த ஒருவரும், வேலனையைச் சேர்ந்த இருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது படகினுள் ஒழித்துவைக்கப்பட்டிருந்த 73கிலோ 900கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் சந்தேகநபர்களை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவை இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating