புகையிரதத்தில் மோதி செவிப்புலனற்ற முதியவர் பலி…!!
Read Time:1 Minute, 10 Second
காலியில் உள்ள கல்வடுகொடை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று(01) காலை 73 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 73 வயது மதிக்கத்தக்க வயோதிபர் செவிப்புலன் அற்றவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த வயோதிபரின் சடலம் கராபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating