50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு…!!
Read Time:48 Second
இராமநாதபுரம் மண்டபம் பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் கடலட்டைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடலட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மீட்கப்பட்ட கடலட்டைகளின் பெறுமதி 50 இலட்சம் இந்திய ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating