நைஜீரியாவில் விவசாயிகள் – மேய்ப்பர்கள் இடையே கடும் மோதல் – 18 பேர் பலி…!!

Read Time:1 Minute, 31 Second

201611021135447250_clashes-between-farmers-and-herders-kill-18-in-niger_secvpfமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் ‘ஃபுலானி’ எனப்படும் நாடோடிகள் இனத்தை சேர்ந்த மேய்ப்பர்கள் ஊர்விட்டு ஊர்மாறிச் சென்று ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு, பிழைத்து வருகின்றனர்.

அவ்வகையில், நைஜர் மாநிலத்தில் உள்ள பங்குயி என்ற கிராமத்தில் இவர்கள் மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, சில கால்நடைகள் ஒருவரின் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி விட்டது.

இதனால், ஆத்திரமடைந்த நிலத்தின் உரிமையாளர் மேய்ப்பர்களுடன் தகராறுசெய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை மேய்ப்பர்கள் ஒன்றுகூடி தாக்கியதால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு நாடோடிகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை தீயிட்டு கொளுத்தினர்.

இதைதொடர்ந்து, இருதரப்பினருக்கும் இடையில் மூண்ட மோதலில் 18 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை சாய் பல்லவி…!!
Next post சீனா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 33 தொழிலாளர்களும் பலி…!!