பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பிரச்சினைக்கு தீர்வு…!!
Read Time:58 Second
பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
தமக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் போதுமானதல்ல எனக் கூறி இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சிவில் பாதுகாப்புப் படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating