இது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…!!
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக பிரபல நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நிதி திரட்டும் பணியில் களம் இறங்கியுள்ளார்.
இந்தியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதுவும் இந்தியாவின் தலைநகரான டெல்லி உள்ளிட்ட நகரங்களில் தான் சிறுமிகள் மற்றும் கல்லூரி பெண்கள் அதிகமாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்.
இதன் பின்னர் பொலிசில் புகார் தெரிவித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினாலும், சீரழிந்த பெண்களின் வாழ்க்கைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங், ஐதராபாத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் பிரபலமானவர்களை வைத்து வருகிற 20-ந் தேதி உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.
ராகுல் பிரீத்சிங்கும் இதில் பங்கேற்று பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்து காட்டுகிறார்.
உடற்பயிற்சி கண்காட்சியில் வசூலாகும் தொகையை பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக வழங்குகிறார்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating