திருமணம் ஆகாமல் கர்ப்பம்? கருவில் ஏசுநாதர் இருப்பதாக கூறும் இளம்பெண்…!!
ஏசுநாதர் தனது வயிற்றில் குழந்தையாக இருக்கிறார் என்று அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம்பெண் கூறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹெய்லி(19) என்னும் இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது தாயாரிடம் தான் கற்பமாக இருப்பதாகவும் தனது வயிற்றில் ஏசுநாதர் குழந்தையாக இருக்கிறார் என்றும் கூறி பெரிதாக இருக்கும் தனது வயிற்றையும் தனது தாயாரிடம் காட்டியுள்ளார்.
திருமணம் ஆகாத தனது மகள் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரை பரிசோதனை செய்துள்ளார், ஆனால் பரிசோதனையில் அந்த கர்ப்பமாக இல்லை என்றும் உடல் பருமனால் அவரது வயிறு பெரிதாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த இளம்பெண் மருத்துவர்கள் உண்மையை மறைப்பதாகவும் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.
இந்த செய்தி அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியதை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்று அந்த பெண்ணிடம் நடத்திய நேர்காணலிலும் அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பது உண்மை தான் என்றும் விரைவில் தான் ஏசுநாதருக்கு தாயாக போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating