ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற தாய் சிசுவுடன் பலி..!!

Read Time:1 Minute, 33 Second

201611032047364908_woman-delivers-baby-aboard-train-both-die_secvpfபீகார் மாநிலம் கிசான்கங்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான கஷ்மிரி கதுன் தனது கணவருடன் டெல்லியில் இருந்து கிசான்கஞ்சுக்கு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் வந்து கொண்டிருந்தார். கஷ்மிரி கதுன் கர்ப்பிணியாக இருந்தார்.

ரெயில் பராயுனி ரெயில்வே நிலையத்திற்கு வரும்முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ரெயில் பராயுனி ஸ்டேஷன் வந்ததும் டாக்டர்கள் மருந்துகள் வழங்கி ஊசி போட்டனர். பின்னர் ரெயில் கதிஹார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டதும் அவரது உடல்நிலை மீண்டும் மோசமான நிலையை அடைந்தது.

அந்த சமயத்தில் அவருக்கு ரெயிலேயே குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவரது கணவர் கூறுகையில் ‘‘மரணம் என்பது இயற்கையானது. ஆனால், எனது மனைவியின் உடலை சிசான்கஞ்ச் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்’’ என்று பரிதாபமாகக் கேட்டுக்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர் குழந்தைகளுக்கு செய்த கொடுமை…!!
Next post மேற்கு மாம்பலத்தில் பெண் வக்கீலை கொன்ற மர்ம வாலிபர் யார்?: கைது செய்ய போலீஸ் தீவிரம்…!!