காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலை…!!

Read Time:1 Minute, 24 Second

201611040929184650_natarajar-statue-caught-in-fisherman-net-on-cauvery-river_secvpfஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர் செல்வராஜ் வீசிய வலையில் மீன்களுடன், ஒரு சிலையும் சிக்கியது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் அந்த சிலையை வந்து பார்த்தனர். அது ஐம்பொன் நடராஜர் சிலை என தெரியவந்தது. அந்த சிலை சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.

பின்னர் மீனவர் செல்வராஜ் அந்த சிலையை வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மீனவர் வலையில் சிக்கிய நடராஜர் சிலை தொல்பொருள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்து சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டறிவார்கள். அதுவரை ஈரோடு சார்நிலை கருவூலத்தில் சிலை பாதுகாப்பாக வைக்கப்படும்’ என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏ தில் ஹை முஷ்கில் படம் திரையிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு: 5 பேர் கைது…!!
Next post ஆடம்பர வாழ்க்கைக்காக மனைவியின் மூக்கை கொடூரமாக கடித்து குதறிய கணவன்…!!