கொழும்பில் நீர்வெட்டு…!!
Read Time:1 Minute, 7 Second
கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை இரவு முதல் எட்டு மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பேஸ்லைன் வீதி, களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான வீதி மற்றும் அனைத்து குறுக்கு வீதிகள், கொழும்பு – 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய நாளை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி வரையான காலப் பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Average Rating