கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!
Read Time:1 Minute, 0 Second
வாரியபொல – பெடாபொல அவுலேகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் தலையில் மற்றும் முகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த நபர் அவுலேகம பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவத்திற்கு கருத்து முரண்பாடே காரணம் எனவும், சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating