பிரித்தானிய பிரதியமைச்சர் இலங்கை வருகிறார்…!!
Read Time:1 Minute, 8 Second
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான பிரித்தானிய பிரதியமைச்சர் ஜோய்ஸ் ஹெனலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை வரும் அவர் இலங்கையின் ஜனநாயகம் , மனித உரிமை பாதுகாப்பு விடயங்கள், நல்லிணக்கம், வறுமையை ஒழிகக் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 7 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யும் அவர், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
பிரித்தானியாவின் ஹலோ ட்ராஸ் நிறுவனம் மேற்கொண்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் பிரித்தானிய பிரதிநிதி பார்வையிட உள்ளார்.
Average Rating