சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற பெண் விரிவுரையாளர் கைது…!!
Read Time:1 Minute, 15 Second
மட்டக்களப்பு பழைய கல்முனை வீதியில் கல்லடி, நாவற்குடா பகுதியில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற பெண் விரிவுரையாளர் உட்பட இருவர் கடந்த புதன் கிழமை(02) கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்த இலங்கை மின்சாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண் விரிவுரையாளர் உட்பட இருவரும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating