பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி…!!
Read Time:1 Minute, 11 Second
கம்பஹா வைத்தியசாலையில் நேற்றிரவு(03) சந்தேக நபர் ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் எனவும் 35 வயதுடைய சுரங்க டயஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த நபர் ஜா-எல பகுதியை சேர்ந்தவர் எனவும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்,மலசலக் கூடம் செல்வதாக கூறி அனுமதி பெற்றுக் கொண்டு பொலிஸ் காவலர்களிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating