கொட்டகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்…!!
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இன்று(04) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கொட்டகலை பகுதியிலிருந்து கொட்டகலை ஹரிங்டன் பிரதேசத்திற்கு சென்ற லொறியும், மோட்டர் சைக்கிளும் கொட்டகலை புகையிரத கடவைக்கு அருகில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, படுங்காயமடைந்த மோட்டர் சைக்கிள் சாரதி சிகிச்சைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெய்து வரும் மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating