பெண்ணை கடத்திச் சென்று செக்ஸ் அடிமையாக்கிய காமுகன் கைது…!!
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி காலா பிரவுன்(30) மற்றும் அவரது நண்பரான சாரல்ஸ் கார்வெர் ஆகியோர் திடீரென மாயமானார்கள்.
ஒரு விருந்து நிகழ்ச்ச்சி சென்றுவிட்டு திரும்பிய அவர்களைப் பற்றிய தகவல் ஏதும் தெரியாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையின் முன்னேற்றமாக போலீசாருக்கு சிறிய தடயம் ஒன்று கிடைத்தது.
இதையடுத்து, உட்ரஃப் என்ற பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டை சோதனையிடுவதற்கான வாரன்ட்டுடன் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். அப்போது, அந்த பண்ணை வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னரில் இருந்து யாரோ உதவி கேட்பதுபோன்ற சப்தம் வந்தது.
கண்டெய்னரின் பூட்டை உடைத்து திறந்த போலீசார், உள்ளே ஒரு நாயைப்போல் கழுத்தில் சங்கிலி போடப்பட்ட நிலையில் காணாமல் போன காலா பிரவுன் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னை கடத்திவந்த அந்த பண்ணை வீட்டின் உரிமையாளரான டோட் கோல்ஹெப் என்பவன் கழுத்தில் சங்கிலி ஒன்றைமாட்டி, இரண்டு மாதங்களாக இந்த கண்டெய்னருக்குள் செக்ஸ் அடிமையாக சிறைவைத்து, சித்ரவதை செய்ததாக போலீசாரால் மீட்கப்பட்ட காலா பிரவுன் கண்ணீருடன் தெரிவித்தார்.
பாலியல்சார்ந்த குற்றச்சாட்டுகளில் ஏற்கனவே பலமுறை தண்டனை அனுபவித்துள்ள டோட் கோல்ஹெப்-ஐ கைது செய்துள்ள போலீசார், காலாவுடன் வந்த அவரது நண்பரான சாரல்ஸ் கார்வெருக்கு என்ன நேர்ந்தது? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Average Rating