அரசாங்கத்தின் மிகப் பெரிய 10 மோசடியாளர்கள் பற்றிய விபரங்கள்…!!
அரசாங்கத்தின் மிகப் பெரிய பத்து மோசடியாளர்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் 9ம் திகதி வெளியிடப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
பாரிய மோசடிகளில் ஈடுபட்ட ஆளும் கட்சியின் பத்து அரசியல்வாதிகள் வரிசைக் கிரமமாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டாவது மிகவும் மோசமான ஊழல் பேர்வழி பற்றிய விபரங்களே 9ம் திகதி வெளியிடப்பட உள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று 9ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்…
பத்து அரசியல்வாதிகளில் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள பிரதமர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலின் ஏனைய ஒன்பது பேர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளன.
இந்த தகவல்கள் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியனவற்றுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Average Rating