சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
நம்மில் பல பேர் சோர்வுத் தன்மை நீங்கி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி டீயை குடிப்போம்.
ஆனால் அடிக்கடி டீ குடிப்பதும் நமக்கு ஆபத்து தான், எனவே உடலுக்கு ஆரோக்கியமான கிராம்பு கலந்த மூலிகை டீயை பருகலாம்.
ஐந்து கிராம்பை ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் அந்த நீரை பருகலாம்.
இந்த டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துக் காணப்படுகிறது.
தலைவலி, உயர்ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, பற்கள் பிரச்சனை, சீரான ரத்தோட்டம், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பு
பல் வலி இருப்பவர்கள் இந்த கிராம்பு கலந்த மூலிகை டீயை மிதமான சூட்டில் குடிப்பது மிகவும் நல்லது!
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating