இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை…!!
Read Time:1 Minute, 7 Second
ஏறாவூர் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட _ கோரகல்லிமடு காளனியை சேர்ந்த நான்கு வயது குழந்தையின் தாய் ஒருவர் தகரத்தால் அமைந்த வீட்டின் வளையில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொன்னம்பலம் வேனுகாவதி (வயது23) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரின் கணவர் (திரு ஜெகன்) தற்போது தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை பிரேதப் பரிசோதனை முடிந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating