பொள்ளாச்சி பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது…!!
கேரள மாநிலம் சித்தூர் கோவிந்தாபுரம் மதுவிலக்கு அதிகாரி அனில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கோவிந்தாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து கேரளா வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி பஸ்சில் அமர்ந்திருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனையடுத்த அவரிடம் சோதனை நடத்தியதில் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கோட்டை ரோட்டை சேர்ந்த குருநாதன் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.