ஒடிசாவில் ஏ.டி.எம். மெஷினை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை…!!
Read Time:1 Minute, 11 Second
ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மெஷினை உடைத்து 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்.
ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஐ.சி.சி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் நேற்றிரவு கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் கட்டிங் மெஷின் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தை வெட்டி உள்ளே இருந்த பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.
கொள்ளைப்போன பணம் சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
Average Rating