தினமும் ஊறுகாய் சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா?

Read Time:2 Minute, 42 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70ஊறுகாய் என்பது அதிக எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள், உப்பு, காரம் ஆகியவற்றை சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.

இதனால் உணவு சாப்பிடும் போது, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக ஊறுகாய் உள்ளது.

எனவே இன்று வெளியூர்களுக்கு சென்று வேலை பார்க்கும் பலரும் கடைகளில் கிடைக்கும் ஊறுகாயை வாங்கி அதிகமாக சாப்பிட்டு வருகின்றார்கள்.

இந்த ஊறுகாய் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும், இதனால் பலவிதமான உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பிறகு நம்மை பாதிக்கின்றது.

ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகள்

ஊறுகாயை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால், ஊறுகாயில் உள்ள சாறானது, நமது வயிற்றில் வலி, பிடிப்புகள் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ஊறுகாயில் அதிக அளவு மசாலா பொருட்கள் மற்றும் அதிக காரம் கலந்திருப்பதால், தீராத அல்சர் பிரச்சனையை உண்டாக்குகிறது.

ஊறுகாயில் அதிக அளவில் உப்பு சேர்த்திருப்பதால், அந்த ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவோர்க்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை கலக்கப்படுகிறது. எனவே நீரிழிவு நோய் இருப்பவர்கள், ஊறுகாய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோயை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரிகளின் கறுப்புத்தினம்…!! கட்டுரை
Next post என்னம்மா நீங்க?… இப்படி பல்ப் வாங்கிட்டீங்களேம்மா…!! வீடியோ