டெல்லியில் மெட்ரோ ரெயில்கள் மோதல்…!!

Read Time:1 Minute, 50 Second

201611060139549238_2-delhi-metro-trains-collide-during-commissioning_secvpfடெல்லியில் ஜானகிபுரி மேற்கு-பொட்டானிக்கல் கார்டன் (தாவரவியல் பூங்கா) மார்க்கத்தில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானாகவே ஓடுகிற, அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்ட மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரெயில்களை சுமுகமாக இயக்குவதற்காக தீவிர சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் பகல் 3.45 மணிக்கு ஜானகிபுரி மேற்கு- பொட்டானிக்கல் கார்டன் (தாவரவியல் பூங்கா) மார்க்கத்தில் காளிந்தி குஞ்ச் ரெயில் பணிமனை அருகே, மெட்ரோ ரெயில்கள் சோதனை ரீதியில் இயக்கி பார்க்கப்பட்டது. அப்போது ஒரு ரெயில் கவனக்குறைவால் பின்னோக்கி சென்று விட, மற்றொரு ரெயிலுடன் மோதி விபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை. எனினும் ரெயில்கள் சற்று சேதம் அடைந்தன. இந்த ரெயில்கள் இயங்குவதை தொடங்கி வைக்கும் பொறுப்பில் உள்ள ‘ஹூண்டாய் ரோட்டம்’ ஊழியரின் கவனக்குறைவுதான் ரெயில்கள் மோதலுக்கு காரணம் என டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அனுஜ் தயாள் கூறினார். எனினும் இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது…!!
Next post திரைப்பட தயாரிப்பாளர் சித்ரா ராமு காலமானார்..!!