17 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!! மாணவியை கடத்தி 17 வயது மாணவர் செய்த காரியம்..!!
பாடசாலை மாணவி ஒருவரை சக மாணவன் ஒருவன் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்து உல்லாசமாக இருந்துள்ள சம்பவம் ஒன்று பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள தனியார் பாடசாலையில் 17 வயது மாணவி ஒருவரும், அதே பாடசாலையில் 17 வயது மாணவர் ஒருவரும் கல்வி கற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த புதன் கிழமை பாடசாலை சார்பில் நடைபெற்ற இலங்கை தமிழர் முகாமில்க லந்து கொண்ட மாணவியை, அங்கு சென்ற மாணவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து மாலையாகியும் வீடு திரும்பாத மாணவியை அவரது பெற்றோர்கள்தேடியுள்ளனர்.
தங்களது உறவினர்கள், மாணவியின் தோழிகள் வீடுகளில் சென்று தேடிப் பார்த்தும் கிடைக்காத மாணவி;குறித்து எருமப்பட்டி காவல்துறையில் புகார் அளித்தனர் அவரது பெற்றோர்கள்.
இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் பரமத்திவேலூர் இலங்கை தமிழர் முகாமில் இருந்த மாணவரையும், மாணவியையும் பிடித்துள்ளனர். இவர்களுக்கு தம்பதியினர் ஒருவர்தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
அங்கு வைத்து 17 வயதான மாணவியை,மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தது, உல்லாசமாக இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவரைக் கைது செய்துள்ளதுடன். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating