அமெரிக்க அதிபர் தேர்தல்- டொனால்டு டிரம் மேடையில் உரையாற்றும் போது இடம்பெற்ற விபரீதம்!! (காணொளி)

Read Time:2 Minute, 45 Second

trump_1478396831803_6859513_ver1-0அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் துப்பாக்கியுடன் ஒரு மர்ம நபர் ஊடுருவியதால் ரகசிய போலீஸ் அதிகாரிகள் அவரை அவசரமாக மேடையை விட்டு வெளியேற்றி பாதுகாத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8 திகதி இடம்பெறவுள்ளது.

ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.தேர்தலுக்கு இன்னும் இருநாட்களே இருக்கும் நிலையில் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டுவரும் கருத்து கணிப்புகளின் அடிப்படையில் டிரம்ப்பைவிட அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு முதல் ஐந்து சதவீதம்வரை வெற்றிவாய்ப்பு மிக்கவராக காணப்படுகிறார்.

இந்த சரிவை சமன்செய்யும் வகையில் டொனால்ட் டிரம்ப் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், மேற்கு அமெரிக்காவில் உள்ள நெவேடா மாநிலத்தில் உள்ள ரெனோ நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் நேற்றிரவு உரையாற்றிகொண்டிருந்தபோது திடீரென்று மேடையில் தோன்றிய அவரது பாதுகாவலரான ரகசிய போலீசார், டிரம்பின் உடலை கேடயம்போல் மறைத்தபடி, அவரை மேடைக்கு பின்புறமாக அழைத்து சென்றனர்.

அதற்குள், மேடைக்கு எதிரே இருந்த ஒருநபரை உள்ளூர் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். அந்த மர்ம நபர் துப்பாக்கியுடன் பிரசார கூட்டத்துக்கு வந்து டிரம்பை கொல்ல முயன்றதாக போலீஸ் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.டிரம்ப்பை கொல்லும் நோக்கத்தில் வந்த அந்த மர்ம நபர் யார்? இந்த நோக்கத்தின் பின்னணி என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

https://youtu.be/O8VnUSoUTII

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையதளத்தில் பயங்கரவாதிகளை கண்காணிக்க நவீன கருவி..!!
Next post நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல மொடல் அழகிக்கு வழங்கப்படவுள்ள கடுமையான தண்டனை?..!!