புதுமாப்பிள்ளையை துண்டுதுண்டாக வெட்டி கொன்றோம்: சினிமா சண்டை பயிற்சி இயக்குனர் நடித்து காட்டினார்…!!
மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் மீனவ பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவரது மனைவி ரங்கீலா. இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திருமணம் நடந்தது.
கார்த்திக் மனைவியுடன் மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிகாட்டு குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு திடீரென கார்த்திக் மாயமானார்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக்கை கடத்தி கொலை செய்து புதைத்து விட்டதாக அவரது உறவினர் டில்லி பாபு செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது ரங்கீலாவுக்கு சேர வேண்டிய சொத்தை அபகரிப்பதற்காக கார்த்திக்கை கொன்றதாகவும் பின்னர் ரங்கீலாவை 2-வது திருமணம் செய்ய திட்டமிட்டதாகவும் கூறினார்.
இதை தொடர்ந்து மாமண்டூர் அருகே பாலாற்றில் கார்த்திக்கின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை டில்லி பாபு அடையாளம் காட்டினார். அப்போது கார்த்திக்கின் எலும்புக்கூடுகள் மட்டும் இருந்தது. அதில் கை, கால்கள் எலும்புகள் துண்டு துண்டாக காணப்பட்டன.
மேலும் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகே மற்றொரு இடத்தில் கார்த்திக்கின் தலை தனியாக இருந்தது. கார்த்திக்கை டில்லி பாபு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
எலும்புக்கூடுகள் மட்டுமே கிடைத்ததால் இதே இடத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
கார்த்திக்கை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து டில்லி பாபு நடித்து காட்டினார். அவர் சினிமாவில் சண்டை பயிற்சி இயக்குனராக இருந்துள்ளார்.
இந்த கொலைக்கு மாமண்டூரை சேர்ந்த வினோத்குமார், சுதாகர் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் மேலும் பரபரப்பு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating